நாகர்கோவில் மாநகராட்சியில் சாலை பணிகள் தொடக்கம்

Update: 2023-10-30 10:00 GMT

சாலை பணிகள் தொடக்கம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. அந்த சாலையை காங்கிரீட் தளமாக அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்றும் 49-வது வார்டு காந்திபுரம் மெயின்ரோடு, பெட்ரோல் பல்க் அருகில் உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி மு க செயலாளர் ஆனந்த், ஜீவா, அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராஜன், சரவணன், வட்ட செயலாளர்கள் ரவி, விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News