கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடி கைது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-07 10:02 GMT

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா காவல் சரகம் பாமணி உள்ளூர் வட்டம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடம் கத்தியை கட்டி மிரட்டி பணம் பறித்த பாமணி உள்ளூர் வட்டம் கீழத்தெருவை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ஆகாஷ் என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர் .

மேலும் ஆகாஷ் மீது மன்னார்குடி தாலுகா காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News