காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விற்பனை அதிகரித்தது. இதன்மூலம் 20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய்கள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-02-13 03:07 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தை பிரசித்தம். அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடைபெறும். நேற்றைய சந்தைக்கு காரிமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், காவேரிப்பட்ட ணம், தட்ரஅள்ளி, குடிமேயன அல்லி, செல்லம்பட்டி, வேலம்பட்டி, பண்ணத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அளவை பொறுத்து ஒரு தேங்காய் 8 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை விற்பனையானது. இதன் மூலம் சுமார் 20 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்த நிலையில், தேங்காய் விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அடுத்தடுத்து திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் கோயில் விழாக்கள் வருவதால், தேங்காய் விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Tags:    

Similar News