குமரி அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் நாளை முதல் 16ம் தேதி வரை தங்க பத்திர விற்பனை நடைபெறுகிறது. பத்திரங்கள் வாங்க விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

Update: 2024-02-11 02:12 GMT
பைல் படம்

இந்திய அரசு தங்கப்பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது .தங்கப் பத்திர விற்பனை பிப்ரவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .6,263/- ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தக்கலை தலைமை அஞ்சலகங்களிலும் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் இந்த ஐந்து நாட்களும் தங்கப்பத்திர விற்பனை நடைபெறும். இந்த நிதியாண்டின் கடைசி தங்கப் பத்திர விற்பனை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம் .மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும் . முதலீட்டாளர்கள் 2016 ஆம் வருடம் இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்த தொகைக்கான (ஒரு கிராம்-ரூபாய் 2600)முதிர்வு தொகையை தற்போது (ஒரு கிராம்- ரூபாய் 6271) பெற்றுள்ளனர். அதாவது 161% இலாபம் ஈட்டி உள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை, அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு , தங்கப் பத்திரத்தை அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9894774410, 9080820107 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும். இத்தகவலை கன்னியாகுமரி கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News