ஓமலூர் அருகே லாட்டரி விற்பனை - முன்னாள் எம்.எல்.ஏ மனைவி மீது வழக்கு

Omalur

Update: 2023-11-23 00:54 GMT

மனோன்மணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள புளியம்பட்டி, கோட்டமேட்டுபட்டி மற்றும் பெரமச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் மற்றும் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஓமலூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புளியம்பட்டி பகுதியில் குட்டி தெருவை சேர்ந்த 50 வயது மதிப்புள்ள ஒரு பெண் செல்போன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதை கண்டறிந்தனர். பின்னர் அவரை ஓமலூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தேமுதிக எம்எல்ஏ பாஸ்கரனினின் மனைவி மனோன்மணி என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10ஆண்டுகளாக கணவரை பிரிந்து இவர் வாழ்ந்து வந்த நிலையில் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்து. இதைதொடர்ந்து ஓமலூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விட்டனர்.

Tags:    

Similar News