தடையை மீறி இறைச்சி விற்பனை!

திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

Update: 2024-04-22 06:22 GMT

இறைச்சி விற்பனை

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜான் பீட்டர், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன், மேற்பார்வையாளர்கள் சகாயம், பிரேம், சைமன், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 42 கிலோ ஆட்டுக்கறி, 67 கிலோ கோழிக்கறி, 10 வெட்டுக்கட்டைகள், 21 வெட்டுக்கத்திகள், 3 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News