தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக சமயபுரம் சுங்கச்சாவடி முற்றுகை

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமயபுரம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

Update: 2024-02-23 05:31 GMT

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோதப் போக்கைக் கண்டித்தும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். இதில், சுங்கச் சாவடியின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் வழிகளில் ஆங்காங்கே சாலையில் படுத்து உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். சிலா், சுங்கச் சாவடிக்குள் வாகனங்கள் நுழையாத வகையில் தடுத்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனா்.

இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 22 போ் கைது செய்யப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னா் மாலையில் விடுவித்தனா். இந்தப் போராட்டம் காரணமாக சமயபுரம் சுங்கச்வாடி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News