புவனகிரி: இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டு
கடலூர் மாவட்டம்,புவனகிரியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மணல் திருட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-28 05:45 GMT
மணல் திருட்டு
கடலூர் மாவட்டம், புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கீரப்பாளையம் முருகன் கோவில் தெருவில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று மணல் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற போது எட்டு மணல் மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பியோடினர். விசாரணையில் மணல் கடத்தியது கீரப்பாளையம் இளஞ்செழியன் மற்றும் அசோக் என தெரிய வந்தது பின்னர் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.