சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் ரங்கசாமி குளக்கரை மேற்கு பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு காரணமாக கழிவுநீர், சாலையில் வழிந்தோடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது.

Update: 2024-04-24 11:25 GMT

காஞ்சிபுரம் ரங்கசாமி குளக்கரை மேற்கு பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு காரணமாக கழிவுநீர், சாலையில் வழிந்தோடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது.  

காஞ்சிபுரம் ரங்கசாமி குளக்கரை மேற்கு பகுதியில், அண்ணா கிளை நுாலகம் இயங்கி வருகிறது. நுாலகம் நுழைவாயில் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், ஒருவாரமாக சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், நுாலகத்திற்கு செல்லும் வாசகர்கள் மட்டுமின்றிஅவ்வழியாக பாதாசாரிகள் மூக்கை பிடித்தபடியே கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெறிப்பதால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவுநீர் தெறிக்கிறது. இங்கு ஒரு வாரமாக கழிவுநீர் வழிந்தோடுவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ரங்கசாமி குளக்கரை நுாலகம் எதிரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது."

Tags:    

Similar News