சத்தியமங்கலம் பத்திரகாளி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம் பத்திரகாளி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை தரிசித்தனர்.

Update: 2024-05-23 14:20 GMT

சத்தியமங்கலம், வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஏராமானோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில்,

மாரியம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில் வகையறா கோயில்களில் கம்பம் மற்றும் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி,பத்ரகாளியம்மன்,மாரியம்மன், மாகாளியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாரியம்மன் கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம் முன் பக்தர்கள் நாள் தோறும் கம்பத்தாட்டம் ஆடி வருகின்றனர். 21-ஆம் தேதி சுவாமி அலங்காரமும், இன்று காலை கோவில் முன் உள்ள 60 அடி குண்டத்தில் பக்தர்கள் ஏராளமானோர் குண்டம் இறங்கினார்கள். மரியம் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ப்பியும், அன்று இரவு கம்பம் பிடுங்குதல் நடைபெற உள்ளது. 24-ஆம் தேதி சுவா மிக்கு புஷ்ப அலங்காரம், ஆராட்டு விழா நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News