அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

திருவட்டார் அருகே அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சிக்மா விளையாட்டு மற்றும் கலை மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-06-30 07:22 GMT

கல்வி உதவித்தொகை வழங்கல் 

கன்னியாகுமரி மாவட்டம் தோட்டவாரம் சிக்மா விளையாட்டு மற்றும் கலை மன்றம் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா தோட்டவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது.மன்ற தலைவர் திபோர்சியஸ் தலைமை வகித்தார். செயலர் அருள்ராஜ் வரவேற்றார். ஆலோசகர் ஜாண் சேவியர், ஆற்றூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சுனிதா, ஜேம்ஸ், மன்றத்தை சேர்ந்த பால் ஸ்டீபன்சன், ரெஜி, சேசையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், இட்டகவேலி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், வில்லுண்ணி கோணம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சுனு, பாரதப் பள்ளி அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜாஸ்மின் லைலா ,தோட்டவாரம் நடுநிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் அயரின் பேபி ஆகியோர் பேசினர்.மன்ற உறுப்பினர் மகேஷ் நன்றி கூறினார் . தோட்ட வாரம் அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளாங்கோடு அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளி, வில்லுண்ணிகோணம் அரசு தொடக்கப்பள்ளி, பாரதப்பள்ளி நடுநிலைபள்ளிகளில் படிக்கின்ற 25 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ 50000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News