நாமக்கல்லில் சுட்டெரிக்கும் வெயில் - தர்பூசணி விற்பனை ஜோர்!

நாமக்கல் நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய தர்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

Update: 2024-04-28 07:17 GMT

நாமக்கல்லில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதியுற்று வருகின்றனர். நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான வெயில் உக்கிரத்தை அடுத்து மக்கள் மதிய நேரங்களில் குளிர்பானங்களையும், இளநீர் மற்றும் பழச்சாறுகளையும் அருந்தி வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல் நகரில் முக்கிய இடங்களில் வெளியூரில் இருந்து ஆட்டோவில் தர்பூசணி பழ விற்பனையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போது ஒரு கிலோ ரூ. 20 க்கு விற்பனை செய்து வருகின்றனர். மக்கள் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News