கலவை பகுதியில் குட்கா விற்ற கடைகளுக்கு ‘சீல்’

கலவை பகுதியில் குட்கா விற்ற 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2024-05-19 06:43 GMT

கடைகளுக்கு சீல் 

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் வாழைப்பந்தல் மற்றும் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் மற்றும் போலீசார் தலைமையில் சம்பந்தப்பட்ட 6 நபர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News