ரூ.3 லட்சத்திற்கு நாட்டுக் கோழிகள் விற்பனை

நல்லம்பள்ளி நாட்டுக்கோழி வாரச்சந்தையில் ரூ.3 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனையானது.

Update: 2024-06-10 03:29 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெற்று வருகிறது. நேற்று ஜூன் 9 நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய மற்றும் வியாபாரிகள் பல்வேறு வகை மற்றும் ரகங்களான நாட்டுக்கோழிகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். அளவை பொறுத்து நாட்டுக்கோழிகள் ஆரம்ப விலை 350 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு 3 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News