தேநீர் குடித்த ஏழு பேருக்கு வாந்தி மயக்கம் கடைக்கு சீல் !

புதுக்கோட்டையில் தேநீர் குடித்த 7 பேருக்கு திடீர் ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடையை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமின்றி இயங்கிவந்த தேநீர்க்கடைக்கு 'சீல்' வைத்தனர்.

Update: 2024-07-08 06:36 GMT

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

புதுக்கோட்டையில் தேநீர் குடித்த 7 பேருக்கு திடீர் ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடையை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமின்றி இயங்கிவந்த தேநீர்க்கடைக்கு 'சீல்' வைத்தனர். புதுக்கோட்டை அடப்பன்வயலைச் சேர்ந்தவர்கள் ரா. கவின் (22), ம. பிரவீன் (18), ப. ரினீஸ் (23), ம. ஹரி (18), சி. சண்முக ஈஸ்வரன் (27), செ. ஜெயராஜ் (17), கு. குணசீலன் (24), அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள்.

இவர்கள் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தேநீர்க் கடையில் பார்சலில் தேநீர்வாங்கிச் சென்று குடித்துள்ளனர்.தேநீர் ஒருமாதிரியாக - புளிப்பாக இருந்ததால், கடைக்கு வந்து கேட்டுள்ளனர். கடையில் இருந்த குடிநீர்ப் பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது அதில் எலி ஒன்று இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பிறகு இவர்களுக்கு வாந்தி வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து திருக்கோகர்ணம் போலீஸாரும் உணவுப் பாதுகாப்புத் துறையினரும் தேநீர்க் கடையை ஆய்வு செய்தனர். சுகாதாரமின்றி தேநீர்க் கடை நடத்தியதாக புதுக்கோட்டை உணவுப் பாதுகா அலுவலர் ரெங்கசாமி கடையைப் பூட்டி 'சீல்' வைத்தார்.

Tags:    

Similar News