நுழைவுத் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் குளறுபடிகளைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-05 06:17 GMT

ஆர்ப்பாட்டம் 

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளின் குளறுபடிகளைக் கண்டித்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நீட், க்யூட், யுஜிசி நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகளை செய்யும் தேசிய தேர்வு முகமையைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் அர்ஜூன், மாவட்டச் செயலர் சந்துரு, மாவட்டக் குழு உறுப்பினர் எடிசன், கிளைத் தலைவர் பிரேம்குமார், செயலர் ரஞ்சித், கிளை நிர்வாகிகள் சரோஜினி, நேஹா, பிரியா, அஸ்வின், ஹரிஷ், பிரேம், ரமணா, திலீப், வீரராஜ், வசந்த், ஜோஷ்வா, ஹரிஷ், தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News