பரமத்தி வேலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டி விழா

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-06-12 16:31 GMT

சஷ்டி பூஜை 

வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு வேலூர் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர்,நன்செய் இடையார் திருவேலிஸ்வரர், கோயிலில் உள்ள சுப்ரமணியர்,நன்செய் இடையாறு ராஜா சாமி திருக்கோயில் உள்ள ராஜா சாமி கோப்பலணம்பாளையம் பரமேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் சுந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News