கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை: மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-30 13:21 GMT
கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊரக பகுதிகளில் மே”2024 மற்றும் ஜீன் "2024 ம் மாதங்களில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில்,

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக தொலை பேசி எண். 04633- 295891 மற்றும் 8148230265 என்ற தொலைபேசி எண்களிலும்,

சுகாதாரம் தொடர்பான குறைகளை 9600212764 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News