பட்டுக்கோட்டையில் திமுக அணிகள் சார்பில் கையெழுத்து இயக்கம்

Update: 2023-10-22 10:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஜி.என்.பி திருமண மண்டபத்தில் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா. அண்ணாதுரை தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி எம்எல்ஏவுமான நா. அசோக்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி. சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதிராஜேஸ் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் மணி முத்து, கந்திலி கரிகாலன், ஆகியோர் நீட் விலக்கு குறித்து சிறப்புரையாற்றினர். மாவட்ட திமுக அவை தலைவர் சுப.சேகர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆதி. ராஜேஸ்வரன், பட்டுக்கோட்டை நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், அன்பழகன், இளங்கோ,ராமநாதன், இளங்கோவன், முருகானந்தம், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பழனிவேலு, முத்துமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News