தேசிய பீச் வாலிபாலில் வெள்ளி - காவலருக்கு எஸ்பி பாராட்டு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்ற பெண் காவலரை எஸ்பி ஹர்ஷ் சிங் பாராட்டினார்.;

Update: 2024-02-20 01:58 GMT

எஸ்பி பாராட்டு 

 காரைக்கால் வீரபத்திரன் மகள் சசிகலா (25) இவர் தமிழ்நாடு காவல்துறையில்2023 ஆண்டில் பணிக்குச் சேர்ந்து தற்போது நாகை மாவட்ட ஆயுதப் படையில் காவலராக உள்ளார், இவர் சிறு வயதிலிருந்து பீச் வாலிபால் போட்டியில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்த நிலையில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் தற்போது காவல்துறையில் பணிக்கு சேர்ந்தும் துறை ரீதியில் சிறப்பு அனுமதி பெற்று கர்நாடகாவில் நடைபெற்ற சர்வதேச பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

Advertisement

கர்நாடகா,தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற 12 மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டில் இவர் கோவா மாநிலத்தில் நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெண் காவலர் சசிகலா கூறுகையில் என் மீது நம்பிக்கை வைத்து பீச் வாலிபால் போட்டியில் பங்குபெற சிறப்பு அனுமதி வழங்க அனுமதி தந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு  தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News