கந்தர்வகோட்டை பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்கம்!

கந்தர்வகோட்டை பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சர் சி.வி.இராமன் அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது.

Update: 2024-02-28 05:17 GMT

அறிவியல் மன்றம்

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சர் சி.வி.இராமன் அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, இஷாத் அகமது, பழனிச்சாமி, இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா, வட்டாரத் தலைவர் துரையரசன், சு.ராஜாமணிக்கம், தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அறிவியல் ஆசிரியர் பாக்கியராஜ் வரவேற்றார். இறுதியில் ஆசிரியர் தங்கராசு நன்றி கூறினார்.
Tags:    

Similar News