கடையநல்லூரில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது

சிறுதானிய உணவு திருவிழாவில் ஆர்வமுடன் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-06 00:49 GMT

கடையநல்லூரில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா போட்டிகள் கடையநல்லூரில் நடைபெற்றது. கடையநல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் சுப்பம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், முத்துப்பாண்டி, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து உணவு தயாரித்தல் போட்டி நடைபெற்றது. போகநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் குருசண்முகப்பிரியா நடுவராக செயல்பட்டாா். போட்டியில் 20 மகளிா் சுயதவிக் குழுவினா் பங்கேற்றனா். இதில், போகநல்லூா் ஊராட்சி வானவில் மகளிா் சுயஉதவிக் குழு முதலிடமும், நெடுவயல் ஊராட்சி கோதாவரி மகளிா் சுயஉதவிக் குழு இரண்டாமிடமும், இடைகால் ஊராட்சி ரோஜா மகளிா் சுயஉதவிக் குழு மூன்றாமிடமும் பெற்றனா். வெற்றிபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News