குட்கா கடத்தல்; பஞ்சாயத்து தலைவியின் கணவர் உட்பட இருவர் கைது

தென்காசியில் குட்கா புகையிலையை கடத்திய திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-27 06:05 GMT
 தென்காசியில் குட்கா புகையிலையை கடத்திய திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை இருந்து வடுகப்பட்டி செல்லும் சாலையில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட திமுக பஞ்சாயத்து தலைவி தமிழ் செல்வியின் கணவர் சுபாஷ் சந்திர போஸ், கார் டிரைவர் லாசர் ஆகிய 2 பேரை சிவகிரி போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Tags:    

Similar News