மண் திருட்டு - வாகனங்கள் பறிமுதல்

மானாமதுரை அருகே மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-06 03:52 GMT
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 
சிவகங்கை மாவட்டம்‌‌, மானாமதுரை அருகே ‌தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் கண்மாய் அருகே கிராவல் மண் அள்ளுவதாக மானாமதுரை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் மண் அள்ளும் இடத்திற்கு சென்று மண் அள்ளிய இரண்டு லாரி மற்றும் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வாகன‌ங்களின் உரிமையாளர் மதிவாணன், டிரைவர் ராஜா‌‌ ஆகியோரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News