மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

தேனி மாவட்டம், வருசநாட்டில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-02 12:47 GMT

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

தேனி மாவட்டம், வருசநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சின்ன காளை இவரது மகள் பாண்டியம்மாளுக்கும் சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து மணிகண்டன் செலவு செய்துள்ளார். இதனை சின்ன காளை கண்டிக்கவே ஆத்திரத்தில் அவரை மணிகண்டன் கத்தியால் குத்தினார். இதுகுறித்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News