பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-02 00:45 GMT
சிறப்பு பூஜை
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே வையாவூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தென் திருப்பதி என அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில், ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு இரவு முழுவதும் மலைக்கோயில் முழுவதிலும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமியை தரிசனம் செய்தனர்.. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..
Tags:    

Similar News