மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - சிறப்பு தரிசனம்

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-03 02:49 GMT

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் கார்த்திகை 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அனைவரும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு மதியம் நடைபெற்ற உச்சிக்கால பூஜையின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Tags:    

Similar News