புதுக்கோட்டையில் தீயணைப்பு துறை சாரிபில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

புதுக்கோட்டையில் தீயணைப்பு துறை சாரிபில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றது.

Update: 2024-02-01 09:41 GMT

விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருச்சி மத்திய மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இதில் புதுகை திருச்சி பெரம்பலூர் கரூர் உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு மீட்பு படையினர் பங்கேற்றனர். முதல் நாளில் துறை சார்ந்த போட்டிகள் கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து போட்டிகள் நடந்தன.

இரண்டாம் நாளில் தடகளம், நீச்சல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி நாளான போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே பரிசுகள் வழங்கினார்.

திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் குமார், புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News