ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க அறக்கட்டளை மண்டல பூஜை விழா

ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க அறக்கட்டளை மற்றும் உறுப்பினர்கள் சார்பில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

Update: 2023-12-09 15:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வானொலி திடலில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் பெரம்பலூர் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க அறக்கட்டளை மற்றும் உறுப்பினர்கள் சார்பில் 57 ஆம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகோத்சவ விழா வெகு விமச்சையாக நடைபெற்றது ஐயப்ப சேவா சங்க தலைவர் , குருசாமி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மண்டல பூஜையில்,

குரு வந்தனம் மற்றும் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ ஐயப்ப சுவாமி, ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து யாக வேல்வியுடன் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டன் பெற்றனர், இதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த மண்டல பூஜை நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க அறக்கட்டளையின் துணைப் பொருளாளர் வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ரவிக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், குருசாமி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சேவை சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் திரளாக மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News