ஆத்தூரில் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி,பால்குட ஊர்வலம்

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், பூங்கரகம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்,

Update: 2024-05-21 08:37 GMT

முளைப்பாரி எடுத்து சென்ற பக்தர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 19ந்தேதி அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி, பூங்கரகம் எடுத்து மேளதாளங்கள் வானவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்தனர் மேலும் பக்தர்கள் கொண்டு,

வந்த பாலை பூஜைகள் செய்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மனை தரிசித்தனர்.

Tags:    

Similar News