மாநில தடகள போட்டி: வாவறை பள்ளி மாணவா்கள் தோ்வு
மாநில தடகள போட்டியில் வாவறை பள்ளி மாணவா்கள் தோ்வாகியுள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-28 10:45 GMT
மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜெபின் நீளம் தாண்டுதலில் முதலிடம், ஆஷிக் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடம், அஸ்லின் உயரம் தாண்டுதலில் முதலிடம், ஷைனு உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம், ஆஷ்மி 100 மீ ஓட்டத்தில் முதலிடம், ராகின் 3000 மீ உள்ஓட்டத்தில் இரண்டாமிடம், அஸ்வின் தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடம், ராகுல்ராம் 400 மீ தொடா் ஓட்டத்தில் இரண்டாமிடம், ரஜின் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடம், அனோகிறைசிஸ் உயரம் தாண்டுததலில் முதலிடம், அபிஜித் 400 மீ ஓட்டத்தில் முதலிடம் உள்பட 21 மாணவ, மாணவியா் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா். இதில் 13 மாணவா்கள், மாநில அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். இந்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆன்றணி சேவியா், தலைமையாசிரியா் சேவியா் அலக்ஸாண்டா், பள்ளி பெற்றோா்-ஆசிரியா் சங்க தலைவா் டாமி சூரஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.