புதுக்கோட்டையில் மாநில மையம் மாநில செயற்குழு கூட்டம்!

புதுக்கோட்டையில் மாநில மையம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-18 16:34 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் 

புதுக்கோட்டையில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில மையம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான தீர்மானங்கள் இயற்றப்பட்டன. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு அலுவலர்கள் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் அருணாச்சலம் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் புதிதாக துவக்கப்பட்ட ஐந்து வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு விடுபட்ட ஐந்து ஆட்சியில் அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேளாண்மை துறை வலியுறுத்துவது. தோட்டக்கலை துறையில் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகங்களில் விடுபட்ட மாவட்டங்களுக்கு ஆட்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க தோட்ட களத்துறை நிர்வாகத்தை வலியுறுத்துவது அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு போதிய அமைச்சுப் பணியாளர்களை உருவாக்க வலியுறுத்துவது.

காலியாக உள்ள பணியாளர்களை புதிதாக நியமிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் இயற்றப்பட்டன முடிவில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி உரையாற்றினார்

Tags:    

Similar News