மாநில அளவிலான கலைத்திருவிழா

காத்தாம்பள்ளத்தில் உள்ள கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான கலைத்திருவிழா நடந்தது.

Update: 2024-02-08 02:49 GMT

காத்தாம்பள்ளத்தில் உள்ள கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான கலைத்திருவிழா நடந்தது. 

  கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி காத்தாம்பள்ளத்தில் உள்ள கொன்சாகா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், நாடகம் என்று பல்வேறு தலைப்புகளில் மாநில அளவிலான கலைத்திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கல்லூரி செயலர் நோயல்ராணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கிளிட்டா சுமங்கலி பேசும் போது, மாணவர்களின் கற்றல் திறனுடன் பிற திறன்களையும் வெளிக்கொண்டு வரும் விதமான இந்த விழா கொண்டாடப்படுவதாக கூறினார்.

Tags:    

Similar News