மாநில அளவிலான மல்யுத்த போட்டி

Update: 2023-12-30 09:43 GMT

மல்யுத்த போட்டி

மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பழநி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஈரோட்டில் கிராபிளிங் கமிட்டி ஆப் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் மாநில அளவிலான 11,13,15,17,20 வயதிற்குட்பட்டோர் மற்றும் சீனியர்களுக்கான மல்யுத்த போட்டி நடந்தது. வயதின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 11 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் பழநியைச் சேர்ந்த மாணவிகள் சரிகா, ஹாசிகா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். மாணவர் சிவசங்கர் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.13 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவர் கிபிஸ்ரீ தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய மல்யுத்த சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் பரிசுகளை வழங்கினார்.
Tags:    

Similar News