புதிய ஆய்வாளருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து

தாழையூத்து காவல் நிலையத்தில் நேற்று புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளரை சந்தித்து, எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-03-16 04:15 GMT

 தாழையூத்து காவல் நிலையத்தில் நேற்று புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளரை சந்தித்து, எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். 

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெல்லையில் பல்வேறு காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிதாக தாழையூத்து காவல் நிலையத்தில் நேற்று (மார்ச் 15) பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளரை எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News