ஆசிரியர் பயிற்சி மைய பாதையை சீரமைக்க நடவடிக்கை தேவை

மாணவர்கள் அவதிக்குள்லாவதால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கொரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-12-20 02:09 GMT
ஆசிரியர் பயிற்சி மைய பாதையை சீரமைக்க நடவடிக்கை தேவை
செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, வட்டார அரசு ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளது. லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இங்கு பயிற்சி அளிப்பது வழக்கம். மேலும், வட்டார அளவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள், பயிற்சி மையத்தில் நடத்தப்படுகின்றன. சாலையில் இருந்து பயிற்சி மையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி உள்ளதால், நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் செல்லும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பயிற்சி மையத்திற்கு செல்லும் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News