திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை பேரணி

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் 2024 - 2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-02 05:12 GMT

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் 2024 - 2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 - 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ப்ரோஸ் கான் , பள்ளி தலைமை ஆசிரியர் த. கொன்னமுத்து, ஆசிரியர்கள் மு. ரமேஷ் , த. சந்திரசேகர் , உதவி ஆசிரியர்கள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். .

Tags:    

Similar News