கூர்நோக்கு இல்லத்தில் மாணவி தற்கொலை

Update: 2023-11-09 12:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வேதா கோவில் தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் காணவில்லை என்று அவரது தந்தை ராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தேடி வந்த நிலையில் காணாமல் போன சிறுமி கோயம்புத்தூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அவரை மீட்டு கடந்த 2ம் தேதி ராஜபாளையம் ஊரகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின் அந்த மாணவி தன்னுடைய தந்தை உடன் செல்ல மறுத்ததால் விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும்.கூர் நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் 17 வயது சிறுமி மிகுந்த மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த சிறுமி கூர்நோக்கு இல்லத்தில் இருந்த ஒரு அறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் கூர் நோக்கு இல்லத்தில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக விருதுநகர் ஊரக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஊரக காவல்துறையினர் சிறுமியின் உடலை உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விருதுநகர் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News