கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

அரூர் அருகே பழைய பேட்டை பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-15 02:41 GMT

 கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழையபேட்டையை சேர்ந்தவர் மாணவர் அஸ்ரத், சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை டியூஷன் செல்வதற்காக கூறி விட்டு மாணவன் சென்றான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மாணவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது மேட்டுத்தெரு பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து அரூர் காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அரூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News