கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் பலி

Update: 2023-12-27 10:21 GMT

மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கம்பனேரி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மதன்( 20). கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் அவா் அப்பகுதியில் புல் அறுத்தபோது அங்கு அறுந்துகிடந்த மின் கம்பியை எதிா்பாராமல் மிதித்துவிட்டாராம். இதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த மதன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News