கந்தர்வகோட்டை அருகே நீரில் மூழ்கி மாணவன் பலி: நீச்சல் தெரியாததால் சோகம்
கந்தர்வகோட்டை அருகே நீரில் மூழ்கி மாணவன் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 10:18 GMT
காவல் நிலையம்
கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டையை சேர்ந்தவர் பீர்முகமது மகன் நவ்பல் (19). திருச்சியில் உள்ள தனியார் கல் லூரியில் பிஇ இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை கல்லாக்கோட்டை அருகே கன்னுக்குடிப் பட்டியில் உள்ள செட்டி ஊரணிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார்.
அப்போது, நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கினார். நண்பர்கள் அவரை மீட்டு வெள்ளாளவிடுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நவ்பல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கந் தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.