குமரி அருகே திருமணம் செய்வதாக மாணவி பலாத்காரம் 

குமரி அருகே திருமணம் செய்வதாக மாணவி பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-16 10:30 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை  அடுத்த கடுக்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் சகாய ஸ்டீபன் (21). தொழிலாளியான  இவருக்கும் அழகியபாண்டியபுத்தை சேர்ந்த ஒரு பிளஸ் டூ மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.      

இதையடுத்து சகாய ஸ்டீபன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடுக்கரையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு மாணவியை தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.      

இந்த நிலையை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாணவியை போலீசார் தேடி வந்தனர்.      

தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் மாணவி சகாய ஸ்டீபனுடன் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடுக்கரையில் சகாய ஸ்டீபனுடன் தங்கி இருந்த மாணவியை போலீசார் மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.      

அப்போது சகாய ஸ்டீபன் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சகாய ஸ்டீபனை போலீசார் கைது செய்து, மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News