திருப்பூர் ஏவிபி மகளிர் கல்லூரியில் மாணவிகள் பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூர் ஏவிபி மகளிர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவிகள் வித்தியாசமாக வேஷ்டி அணிந்து வந்து உற்சாகமாக ஆடி மகிழ்ந்தனர்.

Update: 2024-01-12 11:46 GMT
திருப்பூர் ஏ. வி. பி., கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவிகள் வித்தியாசமாக வேஷ்டி அணிந்து வந்து உற்சாகமாக ஆடி மகிழ்ந்தனர். திருப்பூர் ஏவிபி கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதில் ஏராளமான மாணவிகள் சேலை அணிந்து வந்து உற்சாகமாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். வழக்கமாக மாணவிகள் சேலை அணிந்து வந்து பொங்கல் கொண்டாடும் நிலையில் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் வித்தியாசமாக ஆண்கள் அணியும் உடையான வேஷ்டி அணிந்து வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். கல்லூரியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் வாலிபர்களை போல வேஷ்டி சட்டை கண்ணாடி அணிந்து அவர்கள் நடனமாடி வந்தது வித்தியாசமாக இருந்தது. வேஸ்டி அணிந்து வந்த மாணவிகள் உற்சாகமாக பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்கள்.
Tags:    

Similar News