பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்!
ஆத்தூர் அருகே உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களது பெற்றோரிடம் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.
Update: 2024-03-20 09:09 GMT
ஆத்தூர் அருகே உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களது பெற்றோரிடம் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் பாத பூஜை செய்து ஆசி பெற்றனர் இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்