எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் பொதுக்கூட்ட மைதானத்தில் ஆய்வு

திருப்பூரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தை கட்சியினர் ஆய்வு செய்தனர்.

Update: 2024-03-30 07:25 GMT

திருப்பூர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ள அம்மா திடல் மைதானத்தை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகின்ற 10 ந்தேதி எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். அவர் திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள அம்மா திடல் மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதையொட்டி அம்மா திடல் மைதானத்தினை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில்,  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவுள்ள அம்மா திடல் மைதானத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கவும், பிரம்மாண்ட மேடை அமைக்கவும், அதற்கான வழித்தடம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வரும் வாகனங்கள் நிறுத்தும் வசதி, போக்குவரத்து சிக்கல்கள் இல்லாமல் பார்க்கிங் வசதிகள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News