சுப்ரமணிய சுவாமி சப்பரபவனி

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை சப்பரபவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-10 17:43 GMT

சூப்பர் பவனி

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் என அழைக்கப்படும் சிவன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு சப்பரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தேவானை அலங்கரிக்கப்பட்டது. பின்னர் சிவன் கோவில் தலைமை பட்டர் செல்வம், சுப்பிரமணியன் பட்டர், சண்முகம் பட்டர், உள்ளிட்டோர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிவன் கோவில் நான்கு ரத வீதிகளிலும் சுவாமி சப்பரபவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News