கடன் தொல்லையால் தற்கொலை

மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட கடனை தீர்க்க முடியாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-16 13:24 GMT
மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட கடன். தீர்க்க முடியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, ஆரியூர், வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் சுப்பிரமணி வயது 46. சுப்பிரமணிக்கு தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், பலரிடமும் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த சுப்பிரமணி, மே 15 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், மதுபோதையில் இருந்த அவர், அருகில் உள்ள பலபரப்புபாறை பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மனைவி விசாலாட்சி வயது 33 என்பவர், காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Tags:    

Similar News