திசையன்விளை அருகே கடன் தொல்லையில் தற்கொலை
திசையன்விளை அருகே கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 11:12 GMT
கோப்பு படம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முடவன்குளத்தை சேர்ந்தவர் பெபின். இவர் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.