சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கல்
ஜவ்வாது மலை ஓன்றியத்தில் சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கல் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 12:34 GMT
சமையல் பாத்திரங்கள் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் த.செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ராஜேந்திரன் முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக ஜவ்வாதுமலை ஒன்றியகுழு பெருந்தலைவர் மூ.ஜீவா மூர்த்தி அவர்கள் கலந்துக் கொண்டு சத்துணவு மைய அமைப்பாளர்களும்,
சமையல் பாத்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கணினி உதவியாளர் மலர்வண்ணன் மற்றும் சத்துணவு அமைப்பாளர் கலந்துக் கொண்டனர்.