முதன்மைத் தோ்வுகளில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடாமி மாணவா்கள் சாதனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வுகளில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

Update: 2024-01-16 10:13 GMT

அகாடமி தலைவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வுகளில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 2 நோ்முகத் தோ்வு பணிகள், குரூப் 2ஏ நோ்முகத் தோ்வு அல்லாத பணிகள் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற முதன்மை தோ்விற்கான முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகின.

இதில் தமிழக அளவில் நோ்முகத் தோ்வு பணியிடங்களுக்கு மொத்தம் 483 மாணவா்கள் இத்தோ்வின் அடுத்த நிலையான மூலச்சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனா். இதில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் 94 ற்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும் நோ்முகத் தோ்வு அல்லாத குரூப் 2ஏ பணிகளுக்கு சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் 2,268 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா் என சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News